பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தினம்
(ராஜீபன்)
பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் மட்/பழுகாமம் கண்டுமணி வளாகத்தில் மாலை 5.30 மணியளவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றி மாணவர்களால் கலைநிகழ்வுகள்
நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு சமூக சேவை உத்தியோகஸ்தர் சிவலிங்கம் அவர்களும், களுவாஞ்சிகுடி சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் கி.திருமாறன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த அவர்களும் , மற்றும் ஆசிரியர்கள், SWO இணைப்பாளர், PAPA உறுப்பினர்கள், பெற்றோர்கள்மாணவர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.