Monday 4 May 2015

இராசையா இராசேந்திரன் அவர்களினால் போட்டோகொப்பி இயந்திரம் அன்பளிப்பு.

சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினருக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று பிரித்தானியாவில் வாழும் பழுகாமத்தின் மீது பற்றுக்கொண்ட அன்பர் இராசையா - இராசேந்திரன் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

எமது மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினருக்கு ஓட்டமாவடி அல்-ஹிமா அமைப்பினரால் ஒரு தொகை அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . அவற்றினை வாழைச்சேனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் திரு.நா.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியினால் இவற்றை எமது மாணவச் செல்வங்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர். இதனை கடந்த 03.04.2015 அன்று மாணவர்களிடம் கையளித்தனர்.

Wednesday 4 February 2015

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானப் பணி

பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பழுகாமம் வைத்தியசாலையினுள் சிரமதானப்பணி இடம்பெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றினார்கள்.